
மஞ்சள் குடை
கனவு காண்கிறேன்...
காற்று மோத....
காக்கை மோத....
நான் பறப்பது-
ஓசோன் ஒட்டும் ஓரத்தில்...
பறப்பவை பிறந்தது
நீரிலிருந்தாம்....
நான் பறக்க -
நூறு வருட டார்வினிய சிந்தனை
காற்றில் பறந்தது ....
கேலிதான்.
வலியது -எளியது
பெரியது-சிறியது
கலைவது-நிலைப்பது
ஒப்பீடு எனக்கில்லை
பார்ப்பது யெல்லாம்
ப்ரெய்லி புள்ளிகளே
சோசியலிசம்...கம்யூனிசம்...
நாசிசம்...பாசிசம்...
இன்று
என் கொடையின் கீழ்....
மேலே போக பொக
குறைகிறது- காற்றின் கனம்...
என் தலைக்கனம்...??
இதோ...
உலகின் உடல்...
சல்லடையாய்..
சில போர் வெல்கலாலும்
பல போர்வாள்கலாலும்...
வசந்தத்திலும் வெயில்...
பூமாதேவிக்கு தாகமெடுக்க
அண்டார்டிக்கா ஐஸ் கட்டியோடு
குடிக்கப்பொகிறாள்-கல்கத்தாவை.
உலகின் கூரை பார்க்கிறேன்..
வின்னின் கால் விரல் பார்க்கிறேன்..
மேகத்தின் மடியை பார்க்கிறேன்...
இவை தன்மையின் தடம்...
வேண்டும் வேண்டும் ...
ஆம், வேண்டும் வேண்டும் ...
தண்மை வேண்டும் ..
தனி தேசம் வேண்டும் தமையர்க்கு...
துணை பிரியும் துறவிக்கு...
ஏழ்மை நாடு தின்னும்
கழுகு தேசத்துக்கு..
அனுவுடன் விளையாடும்
அன்பு பூமிக்கும்...
பஞ்சம் விழுங்கும் பரிதாபம்...
பால் மயக்கும் பரிதாபம்...
பதவி செய்யும் பரிதாபம்...
-பாடம்
ஆசைதான்
உலகம் உய்ய....
உணர்கிறேன்
நான் கொற்றவன் கொடை அல்ல....
மஞ்சள் குடை....
-அருண்