மதில்:
புலம் பெயர்ந்த நகரின்
மதில் மிக உயரம்
யாரும் செல்வதற்கில்லை.
-அருண்
புலம் பெயர்ந்த நகரின்
மதில் மிக உயரம்
யாரும் செல்வதற்கில்லை.
-அருண்
Posted by Arun at 12:50 PM 0 comments
மதிய பேருந்தில்
புத்தகத்தின் கடைசி பக்கம்
அத்தனை வெறுமை.
-அருண்
Posted by Arun at 1:35 PM 0 comments
சதை எலும்பு தோல்
நீக்கிப் பார்த்ததில்
சன்னமாய் கசிந்தது
மானுடம்-அள்ளி
வெளியே போட்டேன் .
இரத்தக் கரத்துடன்.
-அருண்
Posted by Arun at 1:46 PM 0 comments
அபத்தங்களின் பிள்ளைகளை
கொல்ல நினைத்து
வரிசையாய் கிணற்றில் வீச
கடைசியாய் நின்றாள்
அபத்தங்களின் தாய் - இன்னும்
சில பிள்ளைகளுடன்.
அவளை கொல்லவா?
-அருண்
Posted by Arun at 1:42 PM 0 comments
விளக்கு வீட்டில்
ஜன்னலைத் திறக்க
பயமாய் இருக்கிறது-அது
இரவா? பகலா?
-அருண்.
Posted by Arun at 1:34 PM 0 comments
நான் ஓங்கி
சத்தம் போட்டும்
பிரபஞ்சம்
ஓசைபடமால் இருக்கிறது.
-அருண்
Posted by Arun at 10:23 AM 0 comments
மடக்கும் கட்டிலை
இருபுறம் தரை தொட
முழுதாய் மூடிய
போர்வையின் உள்ளிருட்டில்
காணமல்போன பூனைக்குட்டி
உள் இழுத்தது-
என் பால்யத்தில்
நானங்கு படுத்திருந்த நினைவுகளை.
நான் குழந்தையா?
-அருண்
Posted by Arun at 7:47 PM 0 comments