Thursday, August 28, 2008

மதில்:



புலம் பெயர்ந்த நகரின்
மதில் மிக உயரம்
யாரும் செல்வதற்கில்லை.

-அருண்

Read More......

Saturday, August 9, 2008

பகற்கனா:



மதிய பேருந்தில்
புத்தகத்தின் கடைசி பக்கம்
அத்தனை வெறுமை.

-அருண்

Read More......

Tuesday, July 15, 2008

பிணவறை :


சதை எலும்பு தோல்
நீக்கிப் பார்த்ததில்
சன்னமாய் கசிந்தது
மானுடம்-அள்ளி
வெளியே போட்டேன் .
இரத்தக் கரத்துடன்.

-அருண்

Read More......

அபத்த கொலை முயற்சி :



அபத்தங்களின் பிள்ளைகளை
கொல்ல நினைத்து
வரிசையாய் கிணற்றில் வீச
கடைசியாய் நின்றாள்
அபத்தங்களின் தாய் - இன்னும்
சில பிள்ளைகளுடன்.
அவளை கொல்லவா?

-அருண்

Read More......

Monday, July 14, 2008

மரணம்


விளக்கு வீட்டில்
ஜன்னலைத் திறக்க
பயமாய் இருக்கிறது-அது
இரவா? பகலா?

-அருண்.

Read More......

Monday, June 30, 2008

தனியன்


நான் ஓங்கி
சத்தம் போட்டும்
பிரபஞ்சம்
ஓசைபடமால் இருக்கிறது.

-அருண்

Read More......

Wednesday, June 11, 2008

தேடக் கிடைத்தது...


மடக்கும் கட்டிலை
இருபுறம் தரை தொட
முழுதாய் மூடிய
போர்வையின் உள்ளிருட்டில்
காணமல்போன பூனைக்குட்டி
உள் இழுத்தது-
என் பால்யத்தில்
நானங்கு படுத்திருந்த நினைவுகளை.
நான் குழந்தையா?

-அருண்

Read More......