துணிமணிகளும் போதி மரமும்
ஞானம் பற்றிய கவிதை அது
தொலைத்துவிட்டேன்- அந்த
வகுப்பில் எழுதிய வரிகளை
அது கிழிந்த கிழிசல்தான்,
வார்த்தைகளும் வரைமடலும்.
தேடினேன்..
இங்கு இருக்குமா?
இல்லை இருக்காது.
எங்கே?
அதில் இருக்குமா?
கேள்விக் குறிகளாய் மனம்.
கிடத்தது பதில்
துணிமனிகளுக்குள்.
ஒரு நோட்டுப்புத்தகத்தில்.
அவனவனுக்கு கிடைத்ததாம்
போதி மர நிழலில்..
எனக்கு
துணிமணிகளுக்குள்.
-அருண்