நேற்றும் ஓர் கனவு
நல் அதிகாலையில்..
கனவுகள் கதவு தட்டியது
அது மூர்க்க ஒலிக்க,
முடியவில்லை
திரும்பிப் படுத்தேன்.
கதவுகள் திறக்கப்பட..
காற்று கட்டிழந்து கத்தியது
மயானச் சாம்பல் மனிதர்கள்
இட்ட நெருப்பு- பலர்
சுட்ட நெருப்பு
உஷ்ணம்.
ஒரு ஓரமாய் ஒதுங்க,
சடை பிடித்து
மத்தியில் போட்டனர்,
சினிமா பொய் சொன்ன
கிங்கினவர்.
மனிதர் கூட்டம்
அம்மனமாய்
ஏனோ கூச்சமில்லை
யாருக்கும் கவலையில்லை
சிரிக்கவுமில்லை
சலனமுமில்லை.
பின்னங் கதவில்
பார்வைகள்.
கூட்ட மத்தியில்
என் குரலில் யாரோ சொன்னது..
"உயிர் வலிக்க உதைப்பார்களாம்"
கதவின் பின்புலத்தில்-ஓர்
முடியாத முனகல்.
விசாரித்ததில்..
இன்னும் உதைக்கிறார்களாம்
ஹிட்லரை.
தடுமாறி விழித்து
கதவடைத்தேன்.
-"நல்லது செய்யனும்"
நேற்றைய கனவிலும்
விழித்தெழுந்தேன்.
-அருண்
Tutorial komen in English dan Tutorial komen in Indonesia